ADDED : நவ 04, 2024 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அதியமான்கோட்டை: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, தம்மணம்பட்டியை சேர்ந்த சலவை தொழிலாளி லுார்துமேரி, 50. இவர் கடந்த, 1 அன்று, 9:00 மணிக்கு அவருடைய வீட்டின் கேட்டை பூட்டி-விட்டு உள்ளே துாங்கிக் கொண்டிருந்தார்.
இரவு, 12:00 மணிக்கு அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர், அவர் அணிந்திருந்த தங்க செயின், தாலி உட்பட, 7 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு தப்பினார். லுார்துமேரி புகார் படி, அதியமான்-கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.