/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
/
காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
ADDED : ஏப் 22, 2025 01:36 AM
அதியமான்கோட்டை:தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையிலுள்ள காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6:00 மணிக்கு கணபதி ஹோமம், 64 பைரவர் ஹோமம், ஏகாந்த ருத்ர ஹோமம், 8:00 மணிக்கு கோ பூஜை, 8.30 மணிக்கு உற்சவமூர்த்தி, கோவிலை வலம் வருதல், தொடர்ந்து, காலபைரவருக்கு, 18 வகையான அபிஷேகங்கள் நடந்தன. பின்னர், ராஜ அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரவு, 10:30 மணிக்கு, 1,008 கிலோ மிளகாய், 108 கிலோ மிளகு மூலம், சத்ரு சம்ஹார யாகம், 64 பைரவர் யாகம், மகா குருதி பூஜை, நள்ளிரவு, 2:30 மணிக்கு பைரவர் சுவாமி பல்லக்கில் கோவில் வருதல், அதிகாலை, 3:00 மணிக்கு, 108 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. இதில், பக்தர்கள் வெண்பூசணியில் தீபமேற்றி வழிபட்டனர்.
* கிருஷ்ணகிரி அருகே, கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியிலுள்ள காலபைரவர் கோவிலில், நேற்று காலை காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தங்கக்கவச அலங்காரத்தில் காலபைரவர் அருள் பாலித்தார். பகல், 12:00 மணிக்கு, காலபைரவர் உற்சவம், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. பெண்கள் பூசணி, தேங்காய் மற்றும் அகலில் விளக்கேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை, 165 கிராமங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். இதேபோல், கிருஷ்ணகிரி அடுத்த கந்திகுப்பம் கால பைரவர் கோவில் மற்றும் சூரன் குட்டை தக்ஷ்ண கால பைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.