ADDED : பிப் 01, 2026 04:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மோளை-யானுார் அரசு உயர் நிலைப்பள்ளியில், தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறை திருக்குறள் திருப்பணிகள் திட்டம் சார்பில், திருக்குறள் பயிற்சி வகுப்பு நடந்தது. தலைமையாசிரியர் அசோக்-குமார் தலைமை வகித்தார்.
தமிழாசிரியர் இளஞ்செழியன் வரவேற்றார். அரூர், பாப்பிரெட்-டிப்பட்டி வட்டங்களின் பொறுப்பாளர் பாவலர் மலர்-வண்ணன், உலக பொதுமறை தமிழ்ச்சங்க செயலாளர் எழுத்-தாளர் உதயசூரியன், கவிஞர், ஆசிரியர் மாரி கருணாநிதி ஆகியோர் மாண-வியருக்கு திருக்குறள் பயிற்சி வகுப்பு எடுத்து பேசினர்.
தொடர்ந்து, திருக்குறள் போட்டி களில் சிறப்பிடம் பெற்ற மாண-வியருக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பட்ட-தாரி ஆசிரியர் பழனி நன்றி கூறினார்.

