ADDED : ஜூன் 21, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, தர்மபுரி உள் வட்டத்தில், வருவாய் ஆய்வாளராக பணிபுரிபவர் வெங்கடேசன். கிராவல் மண் கடத்துவதாக இவருக்கு தகவல் கிடைத்தது. அன்னசாகரம் அடுத்த சந்தனுார் கொட்டாய் பகுதியில், வி.ஏ.ஓ., வெங்கடேசன், கிராம உதவியாளர் ரஞ்சித்குமார் ஆகியோருடன், அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், 4 யூனிட் கிராவல் மண் கடத்தியது தெரியவந்தது. அதனை தொடர்ந்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, டிரைவர் விஜயகுமாரை பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.