/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
புகையிலை பொருட்கள் விற்பனை கடைக்கு 'சீல்'
/
புகையிலை பொருட்கள் விற்பனை கடைக்கு 'சீல்'
ADDED : பிப் 08, 2025 06:52 AM
மாரண்டஹள்ளி: -தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளியில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திருப்பதி, மாரண்டஹள்ளி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., தணிகாசலம் உள்-ளிட்ட குழுவினர் இணைந்து,
மாரண்டஹள்ளி பஸ் ஸ்டாண்ட், வெளிச்சந்தை ரோடு, பஞ்சப்பள்ளி சாலை மற்றும் அதனை
சுற்-றியுள்ள பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், பெட்டி கடை-களில் சோதனை நடத்தினர்.அதில், பஞ்சப்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள பீடா கடையில், இருந்து தடை
செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய-வந்தது. அந்த
கடைக்கு சீல் வைத்து, 25 ஆயிரம் ரூபாய் அப-ராதம் விதித்தனர்.