sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

புகையிலை விற்ற கடைக்கு 'சீல்'; ரூ.25,000 அபராதம் விதிப்பு

/

புகையிலை விற்ற கடைக்கு 'சீல்'; ரூ.25,000 அபராதம் விதிப்பு

புகையிலை விற்ற கடைக்கு 'சீல்'; ரூ.25,000 அபராதம் விதிப்பு

புகையிலை விற்ற கடைக்கு 'சீல்'; ரூ.25,000 அபராதம் விதிப்பு


ADDED : ஜூன் 20, 2024 06:09 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 06:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மொரப்பூர்: தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் பானுசுஜாதா மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், கந்தசாமி உள்ளிட்ட குழுவினர், மொரப்பூர் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள மளிகை கடையில், நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, கடை உரிமையாளருக்கு, 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், கடைக்கு, 'சீல்' வைக்கப்பட்டது. அதேபோல், அரூர், மொரப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மளிகை, பெட்டிக்கடைகள், உணவகங்கள், குளிர்பான கடைகள் மற்றும் பேக்கரிகளில், 40 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள், காலாவதியான குளிர்பான பாட்டில்கள், உரிய விபரங்கள் இல்லாத தின்பண்டங்கள் மற்றும் செயற்கை நிறம் ஏற்றப்பட்ட கார மற்றும் இறைச்சி வகைகள் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக, 5 கடைகளுக்கு தலா, 2,000 ரூபாய், மேலும், 5 கடைகளுக்கு தலா, 1,000 ரூபாய் என, மொத்தம், 15,000 அபராதம் விதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us