/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தக்காளி விலை சரிவு; விவசாயிகள் கவலை
/
தக்காளி விலை சரிவு; விவசாயிகள் கவலை
ADDED : மே 29, 2024 07:32 AM
அரூர் : தர்மபுரி மாவட்டத்தில் அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார், தீர்த்தமலை, நரிப்பள்ளி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில், 3,000க்கும் மேற்பட்ட ஏக்கரில், தக்காளி நடவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது, சந்தையில் தக்காளி விலை குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், 'அரூரில், கடந்த, 4 நாட்களுக்கு முன்பு வரை, 28 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி, 1,000 ரூபாய்க்கு விற்றது. நேற்று முன்தினம் விலை குறைந்து ஒரு கூடை தக்காளி, 600 முதல், 700 ரூபாய் வரை விற்பனையானது. தொடர் மழையால், தக்காளியின் மேற்பகுதியில் கருப்பு கோடு மற்றும் புள்ளிகள் உள்ளதால், வெளிமாவட்டங்களுக்கு தக்காளி கொண்டு செல்ல முடியாதது, விலை குறைவுக்கு காரணம். மேலும், ஆந்திராவில் இருந்து தரமான தக்காளி வருவதும், விலை சரிவுக்கு ஒரு காரணம்' என்றனர்.