/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
/
ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ADDED : மே 05, 2025 03:06 AM
ஒகேனக்கல்: வார விடுமுறையையொட்டி, தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் நேற்று, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
ஒகேனக்கல், தர்மபுரி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், ஒகேனக்கல்லில் நீர்வரத்து நேற்று வினாடிக்கு, 4,000 கன அடியாக வந்தது. கோடை விடுமுறை தொடங்கியதை அடுத்து, ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை, 20 ஆயிரத்திற்கும், மேல் காணப்பட்டது.
இவர்கள் மசாஜ் செய்து, காவிரி யாற்றில் மெயின் பால்ஸ், சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் குளித்தனர். தொடர்ந்து, ஒகேனக்கல்லில் பிரசித்தி பெற்ற மீன் குழம்பு சமைத்து சாப்பிட்டனர். மேட்டூர் அணையில் தொடர்ந்து, 100 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளதால், ஒகேனக்கல்லில் நீர் தேக்கமடைந்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது. இந்நிலையில், சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு, பாறைகளுக்கு இடையே ஆற்றில் பரிசல் பயணம் செய்து மகிழ்ந்தனர். பரிசல்கள் சின்னாறு பரிசல் துறையில் இருந்து, மெயின் பால்ஸ், மணல் திட்டு, பெரியபாணி உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் எழில்மிகு அழகை கண்டு ரசித்தனர்.