sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

புதிய பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டுக்கு கொண்டு வர வணிகர்கள் வலியுறுத்தல்

/

புதிய பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டுக்கு கொண்டு வர வணிகர்கள் வலியுறுத்தல்

புதிய பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டுக்கு கொண்டு வர வணிகர்கள் வலியுறுத்தல்

புதிய பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டுக்கு கொண்டு வர வணிகர்கள் வலியுறுத்தல்


ADDED : நவ 06, 2024 01:21 AM

Google News

ADDED : நவ 06, 2024 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர், நவ. 6-

தர்மபுரி மாவட்டம், அரூரில், 3.62 கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா கடந்த, 24ல் நடந்தது. இதில், அமைச்சர்கள் நேரு, பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். பஸ் ஸ்டாண்டை அமைச்சர் நேரு திறந்து வைத்தார்.

பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா நடந்த போதிலும், பஸ் ஸ்டாண்டில் மின் இணைப்பு வழங்காதது, புறக்காவல் நிலையம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நேர அலுவலகம் அமைத்தல் உள்ளிட்ட சில பணிகள் முடிவடையாத காரணத்தினால், பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.

வர்ணதீர்த்தம் முதல், பொதுப்பணித்துறை குடியிருப்பு பகுதியில் உள்ள சாலையின் ஒரு பகுதியில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிதாக திறக்கப்பட்ட பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கோரி, நேற்று அரூர் அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகள், அரூர் தாசில்தார் ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, வரும், 11ல் முதல், பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us