sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி

/

தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி

தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி

தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி


ADDED : மார் 25, 2024 07:16 AM

Google News

ADDED : மார் 25, 2024 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி : தர்மபுரி லோக்சபா தொகுதி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டு சாவடிகளில், பணியாற்றும் ஓட்டு பதிவு அலுவலர்கள், 1, 2, 3 ஆகியோருக்கான பயிற்சி வகுப்பு, பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக்கல்லுாரியில் நேற்று உதவி தேர்தல் அலுவலர் செர்லினா ஏஞ்சலா தலைமையில் நடந்தது.

இந்த பயிற்சியில், தேர்தலின் போது, கடைபிடிக்க வேண்டிய தேர்தல் விதிமுறைகள், ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தும் முறை, மாதிரி ஓட்டுப்பதிவு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டது. இப்பயிற்சியை மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சாந்தி ஆய்வு செய்து, ஆலோசனைகள் வழங்கினார்.

தாசில்தார் சரவணன், தனி தாசில்தார் பெருமாள், தேர்தல் துணை தாசில்தார் சிவஞானம், ஆர்.ஐ., கார்த்திக் உள்ளிட்ட ஓட்டு பதிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.* அரூர் அடுத்த எச்.தொட்டம்பட்டியிலுள்ள தனியார் பள்ளியில், அரூர் தாலுகாவில் பணிபுரியும் அனைத்து ஓட்டுச்சாவடி தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.காலை, 9:00 முதல், மதியம், 1:00 மணி வரையும், பிற்பகல், 2:00 முதல், 6:00 மணி வரையும் நடந்த பயிற்சி வகுப்பை, கலெக்டர் சாந்தி ஆய்வு செய்து, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.






      Dinamalar
      Follow us