ADDED : ஜன 16, 2025 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: சேலம் மாவட்டம், அம்மாபேட்டை, அயோத்தியாபட்டணம், வீராணம், மின்னாம்பள்ளி, தாரமங்கலம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் நேற்று, அரூர் வழியாக, திருப்பதிக்கு பாதயாத்திரையாக சென்றனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: சேலம் மாவட்டத்தை சேர்ந்த, 80க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதிக்கு பாதயாத்திரையாக செல்கிறோம். வரும், 21ல், திருப்பதிக்கு சென்றடைந்து சுவாமியை தரிசிக்க உள்ளோம். கடந்த, 47 ஆண்டுகளாக திருப்பதிக்கு பாதயாத்திரையாக சென்று வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

