/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தேசிய வேளாண் சந்தை மூலம்ரூ.21.61 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்
/
தேசிய வேளாண் சந்தை மூலம்ரூ.21.61 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்
தேசிய வேளாண் சந்தை மூலம்ரூ.21.61 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்
தேசிய வேளாண் சந்தை மூலம்ரூ.21.61 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்
ADDED : ஏப் 18, 2025 01:29 AM
தர்மபுரி:வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையில், தர்மபுரி விற்பனைக்குழு செயல்பட்டு வருகிறது. இதில், விவசாயிகள் விளைவித்த பொருட்கள் வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகளுக்கு அதிக விலைக்கு மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம், விற்பனை செய்யப்படுகிறது. தர்மபுரி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில், ஒரு குவிண்டால் பனங்காளி மஞ்சள், 24,799 ரூபாய், விரலி, 15,169, உருண்டை, 13,199, ரூபாய் என ஏலம் போனது.
இதில், 89 விவசாயிகள் கொண்டு வந்திருந்த, 169 குவிண்டால் மஞ்சள், 21.61 லட்சம் ரூபாய்க்கு ஏலம்போனதாக, வேளாண் விற்பனை கூட கண்காணிப்பாளர் முரளிதரன் தெரிவித்தார்.

