ADDED : மே 26, 2026 08:56 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பட்டுகோணாம்-பட்டி, குமரக்கோட்டம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன், 44. மின்வாரிய ஊழியர். இவர் குமரக்கோட்டத்தில் உள்ள தன் தோட்டத்தில் தீவனப்பயிர் மற்றும் கோழிகள் வளர்த்து வரு-கிறார். கடந்த, 17ல் தோட்டத்தில் இருந்த, 15 கோழிகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இதே போன்று நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில் தோட்டத்திற்கு கார்த்திகேயன் சென்றார். அப்போது கூண்டில் அடைக்கப்பட்ட, 4 கோழிகளை காணவில்லை. தேடியபோது தீவன பயிருக்குள் பட்டுகோணாம்பட்டியை சேர்ந்த அபிஷேக், 21, மற்றும் சேலம் மாவட்டம் வாழப்-பாடியை சேர்ந்த, 14 வயது சிறுவன், கோழிக-ளுடன் இருந்துள்ளனர். இதையடுத்து கார்த்தி-கேயன் கொடுத்த புகார் படி, பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் அபிஷேக் மற்றும் 14 வயது சிறு-வனை கைது செய்தனர்.
