sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தர்மபுரி கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் இரு குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி

/

தர்மபுரி கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் இரு குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி

தர்மபுரி கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் இரு குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி

தர்மபுரி கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் இரு குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி


ADDED : ஏப் 22, 2025 01:53 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறைதீர் முகாம் நடந்தது. அங்கு வந்த பென்னாகரம் அடுத்த, வண்ணாத்திப்பட்டியை சேர்ந்த மாதப்பன், 70, அவர் மனைவி மங்கம்மாள், 56, ஆகியோர் தீக்குளிக்க முயன்றனர். அங்கிருந்த போலீசார் இருவரையும் மீட்டு விசாரித்தனர்.

அதில் அவர்கள், பல ஆண்டுகளுக்கு முன், வீடு கட்டி வசித்த இடத்தின் அருகே, வேறு ஒருவர் வீடு கட்டியுள்ளார். அவருக்காக வருவாய்த்துறையினர் எங்களது நிலம் நீர்நிலை கால்வாயில் உள்ளதாக கூறி, வீட்டை அகற்ற உத்தரவிட்டனர். இது குறித்து, முறையாக அளவீடு செய்யாமல், எங்களை அங்கிருந்து அகற்றும் நோக்கில் செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றதாக கூறினர். கலெக்டரிடம் மனு அளிக்க அவர்களை, போலீசார் அழைத்து சென்றனர்.

அதேபோல், சாமாண்டஹள்ளியை சேர்ந்த சிவக்குமார், 46, அவரின் மனைவி சென்னம்மாள், 38, ஆகியோர், தங்கள் வீட்டுக்கு செல்லும் பாதையை உறவினர்கள் ஆக்கிரமித்து தடுப்பதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றனர். போலீசார் அவர்களை மீட்டு, விசாரணைக்கு, தர்மபுரி டவுன் போலீஸ்

ஸ்டேஷனுக்கு அனுப்பினர்.






      Dinamalar
      Follow us