sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

 வேன் - லாரி மோதி இருவர் பலி

/

 வேன் - லாரி மோதி இருவர் பலி

 வேன் - லாரி மோதி இருவர் பலி

 வேன் - லாரி மோதி இருவர் பலி


ADDED : ஜன 30, 2026 02:24 AM

Google News

ADDED : ஜன 30, 2026 02:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: ராணிப்பேட்டை மாவட்டம், பழைய மாங்காடை சேர்ந்தவர் சாவித்திரி, 53; இவரது குடும்பத்தினர், உறவினர்கள் என, 24 பேர், நேற்று முன்தினம் இரவு, சேலம் கொண்டலாம்பட்டி அருகே, குலதெய்வ கோவிலில் சாமி கும்பிட, வேனில் புறப்பட்டனர். குமரேசன், 34, வேனை ஓட்டினார்.

நேற்று அதிகாலை, 4:10 மணிக்கு, தர்மபுரி, தடங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவாயில் எதிரே, சாலையோரத்தில் வேனை நிறுத்தினர். அப்போது, பெங்களூருவில் இருந்து காட்டன் துணிகள் ஏற்றி வந்த லாரி, வேனின் பின்னால் மோதி, சாலையில் கவிழ்ந்தது.

இதில், வேனில் இருந்த சாவித்திரி, டிரைவர் குமரேசன் ஆகியோர், சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயமடைந்த தருண், 15, கண்ணு, 42, மாதிரை, 39, ஆகிய மூவர், தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதியமான்கோட்டை போலீசார், விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us