ADDED : மே 18, 2026 02:30 AM
காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கொட்டாவூர் கிரா-மத்தை சேர்ந்த கீர்த்தனா, 20. இவர் ஓசூரிலுள்ள தனியார் கல்லுா-ரியில் பி.காம்., சி.ஏ., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த, 16ம் தேதி கீர்த்தனா மாயமானார். பெற்றோர் புகார் படி காரிமங்-கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
* பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஆலாபுரத்தை சேர்ந்தவர் ரம்யா, 26. இவருக்கும், சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள ஒக்கிலிப்பட்டியை சேர்ந்த முருகேசன், 32 என்பவருக்கும் கடந்த, 5 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இவர்கள் தறி வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு, ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த, 2 நாட்களுக்கு முன் ரம்யா தன் தாய் வீடான ஆலப்புரத்திற்கு வந்தார். நேற்று காலை ஜீவா நகரிலுள்ள தன் உறவினர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. புகார் படி, பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
