sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., உட்பட இருவர் கைது

/

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., உட்பட இருவர் கைது

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., உட்பட இருவர் கைது

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., உட்பட இருவர் கைது


ADDED : ஜன 06, 2024 12:29 AM

Google News

ADDED : ஜன 06, 2024 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி,:தர்மபுரி மாவட்டம் மிட்டாநுாலஹள்ளி அடுத்த பூசாலிக்கொட்டாயை சேர்ந்தவர் கணேசமூர்த்தி 35; விவசாயி. இவரது தாத்தாவுக்கு சொந்தமான 18 சென்ட் நில சிட்டாவில் தவறுதலாக கமலேஷ் என்பவரின் பெயர் சேர்க்கப்பட்டதை அறிந்து, அந்த பெயரை நீக்க நுாலஹள்ளி வி.ஏ.ஓ., அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

'பெயரை நீக்க 20,000 ரூபாய் லஞ்சம் வேண்டும்' என நுாலஹள்ளி வி.ஏ.ஓ., வெங்கடேசன் கேட்டுள்ளார். தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசில் கணேசமூர்த்தி புகார் செய்தார்.வெங்கடேசனுக்கு லஞ்சம் தர கணேசமூர்த்தி நேற்று சென்றார். வெங்கடேசன் கூறியதால் அங்கிருந்த தனியார் அலுவலர் அமுதா 20,000 ரூபாயை பெற்றார். மறைந்திருந்த தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார், அமுதா, 24, வெங்கடேசன், 35, ஆகியோரை கையும் களவுமாக கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us