/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பிளஸ் 2 தேர்வில் 'பிட்' அடித்த இரண்டு மாணவர்கள் சிக்கினர்
/
பிளஸ் 2 தேர்வில் 'பிட்' அடித்த இரண்டு மாணவர்கள் சிக்கினர்
பிளஸ் 2 தேர்வில் 'பிட்' அடித்த இரண்டு மாணவர்கள் சிக்கினர்
பிளஸ் 2 தேர்வில் 'பிட்' அடித்த இரண்டு மாணவர்கள் சிக்கினர்
ADDED : மார் 11, 2026 07:37 AM
தர்மபுரி:அரூர்
அருகே, பிளஸ் 2 பொதுத்தேர்வில் 'பிட்' அடித்த, தனியார் பள்ளி மாணவர்கள்
இருவரை, சிறப்பு பறக்கும் படையினர் நேற்று முன்தினம் பிடித்தனர்.
பிளஸ்
2 வகுப்பு பொதுத்தேர்வில் நேற்று முன்தினம், வேதி-யியல் தேர்வு
நடந்தது. இதில், தர்மபுரி மாவட்டம், அரூரிலுள்ள சில தேர்வு
மையங்களில் தனியார் பள்ளிகள் இயக்குனர் சுகன்யா, தேர்வுகள் இயக்கக இணை
இயக்குனர் ராஜேந்திரன், உதவி இயக்குனர்
சாந்தகுமார் ஆகியோர் தலைமையிலான சிறப்பு பறக்கும் படை-யினர் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது,
அரூர் பகுதியிலுள்ள, 2 தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த
தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய, 2 மாணவர்கள், 'பிட்' வைத்து தேர்வு
எழுதியது தெரிந்தது. இதை-யடுத்து, அவர்களிடமிருந்த விடைத்தாள்கள்
பறிமுதல் செய்யப்-பட்டன. இந்த முறைகேடு தொடர்பாக, சம்மந்தப்பட்ட
தனியார் பள்ளியில், கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி
வருகின்றனர்.

