/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
காதல் கணவர் இறப்பை தாங்காத மனைவி விஷமருந்தி தற்கொலை
/
காதல் கணவர் இறப்பை தாங்காத மனைவி விஷமருந்தி தற்கொலை
காதல் கணவர் இறப்பை தாங்காத மனைவி விஷமருந்தி தற்கொலை
காதல் கணவர் இறப்பை தாங்காத மனைவி விஷமருந்தி தற்கொலை
ADDED : ஜூலை 13, 2025 01:13 AM

பாப்பிரெட்டிப்பட்டி:கடத்துார் அருகே, காதல் திருமணம் செய்த கணவர் உயிரிழந்த நிலையில், அவரது பிரிவை தாங்க முடியாத மனைவி, இன்ஸ்டாவில் உருக்கமாக பதிவிட்டு, தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி மாவட்டம், தாளநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் தீபமலை, 26; பி.இ., பட்டதாரி. புட்டிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் கீதா, 21; லேப் டெக்னீஷியன்.
வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும், பெற்றோர் எதிர்ப்புக்கு இடையே ஓராண்டுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.
தீபமலைக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக கீதா பல மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்றார்.
உடல்நிலை மோசமானதை உணர்ந்த தீபமலை, தன் மனைவியை வற்புறுத்தி, இரு மாதங்களுக்கு முன், அவரது தாய் வீட்டிற்கு அனுப்பினார். ஜூன், 29ல் தீபமலை உயிரிழந்தார்.
காதல் கணவர் இறந்த வேதனையில் இருந்த கீதா கடந்த, 5ல் இன்ஸ்டாகிராமில், 'என்னால், உன்னை பிரிந்திருக்க முடியாது; உன்னிடமே வருகிறேன்' என பதிவிட்டு, விஷம் அருந்தினார்.
பெற்றோர், அவரை தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், நேற்று காலை உயிரிழந்தார்.
அவர், இறப்பதற்கு முன், நண்பர்களுக்கு இன்ஸ்டாகிராமில், தான் இறந்த பிறகு தீபமலையின் உடல் அடக்கம் செய்த இடம் அருகே, தன் உடலை அடக்கம் செய்யும்படி கூறியிருந்தார்.
தன் பெற்றோரிடமும் வலியுறுத்தி உள்ளார். பெற்றோரும், தாளநத்தம் ஊர் மக்களும், தீபமலையின் உடல் அடக்கம் செய்த இடம் அருகே கீதாவின் உடலை அடக்கம் செய்தனர்.
கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.