ADDED : அக் 10, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், அரூர் தாலுகா அலுவலகம் முன், தர்மபுரி கிழக்கு மாவட்ட, வி.சி., சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சாக்கன்சர்மா தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது, தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதை கண்டித்தும், வி.சி., தலைவர் திருமாவளவனுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்ககோரியும் கோஷம் எழுப்பினர். இதில், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் முகாம் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.