/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரி மாவட்ட உழவர் சந்தைகளில் ரூ.37 லட்சத்துக்கு காய்கறி விற்பனை
/
தர்மபுரி மாவட்ட உழவர் சந்தைகளில் ரூ.37 லட்சத்துக்கு காய்கறி விற்பனை
தர்மபுரி மாவட்ட உழவர் சந்தைகளில் ரூ.37 லட்சத்துக்கு காய்கறி விற்பனை
தர்மபுரி மாவட்ட உழவர் சந்தைகளில் ரூ.37 லட்சத்துக்கு காய்கறி விற்பனை
ADDED : செப் 28, 2025 02:20 AM
தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்திலுள்ள உழவர் சந்தைகளில், நேற்று புரட்டாசி மாதம், 2வது சனிக்கிழமையை முன்னிட்டு, 37 லட்சம் ரூபாய்க்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையானது.
தர்மபுரி டவுன் உழவர் சந்தையில், நாளொன்றுக்கு, 20 முதல், 25 டன் காய்கறிகள் விற்பனையாகும். புரட்டாசி மாதத்தில் வரும், அனைத்து சனிக்கிழமை நாட்களிலும், பெருமாள் சுவாமிக்கு பக்தர்கள் விரதமிருந்து, படையலிட்டு வழிபடுவது வழக்கம்.
இதனால், உழவர் சந்தைகளில் காய்கறிகள் விற்பனை அதிகரித்து காணப்படும். நேற்று புரட்டாசி மாதத்தின், 2வது சனிக்கிழமை என்பதால், உழவர் சந்தையில் கூடுதலாக காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையானது.
இதில், தர்மபுரி உழவர் சந்தையில், 38 டன் காய்கறிகள், பாலக்கோடு, 12, பென்னாகரம், 7, அரூர், 12, ஏ.ஜெட்டிஹள்ளி, 24, காரிமங்கலம், 3.90 டன் காய்கறிகள் என, மாவட்டத்திலுள்ள, 6 உழவர் சந்தைகளில் மொத்தம், 99 டன் காய்கறிகள், 7 டன் பழங்கள் என, 37 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. இதில், 301 விவசாயிகள் கொண்டு வந்த காய்கறிகளை, 22,428 நுகர்வோர் வாங்கிச்சென்றனர்.