/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
காதல் கணவர் நோயில் உயிரிழப்பு வேதனையில் மனைவி தற்கொலை
/
காதல் கணவர் நோயில் உயிரிழப்பு வேதனையில் மனைவி தற்கொலை
காதல் கணவர் நோயில் உயிரிழப்பு வேதனையில் மனைவி தற்கொலை
காதல் கணவர் நோயில் உயிரிழப்பு வேதனையில் மனைவி தற்கொலை
ADDED : ஜூலை 13, 2025 01:30 AM
பாப்பிரெட்டிப்பட்டி, :கடத்துார் அருகே, காதல் திருமணம் செய்த கணவர் உயிரிழந்த நிலையில், அவரின் பிரிவை தாங்க முடியாத, மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி மாவட்டம், கடத்துார் அடுத்த தாளநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் தீபமலை,26; பி.இ., பட்டதாரி. புட்டிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் கீதா,21; லேப் டெக்னீசியன். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் காதலித்தனர். திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன், திருமணம் செய்து கொண்டனர். தீபமலைக்கு, புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டது. அவரை கீதா, சிகிச்சைக்கு பல மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்றார்.
உடல்நிலை மோசமானதை உணர்ந்த தீபமலையின் வற்புறுத்தலால், கடந்த, 2 மாதத்திற்கு முன், கீதா தன் தாய் வீட்டிற்கு சென்றார்.
கடந்த ஜூன் மாதம், 29ல் தீபமலை உயிரிழந்தார்.காதல் கணவர் இறந்த வேதனையில் இருந்த கீதா கடந்த, 5ல் இன்ஸ்டாகிராமில், 'என்னால், உனை பிரிந்திருக்க முடியாது, உன்னிடமே வருகிறேன்' என பதிவு செய்து விட்டு, எலி பேஸ்ட்டை சாப்பிட்டுள்ளார். பெற்றோர், அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த நிலையில், நேற்று காலை உயிரிழந்தார்.
அவர் இறப்பதற்கு முன், நண்பர்களுக்கு இன்ஸ்டாகிராமில், தான் இறந்த பிறகு தீபமலையின் உடல் அடக்கம் செய்த இடம் அருகே, தன்னை அடக்கம் செய்யும்படி கூறியிருந்தார். மேலும் தன் பெற்றோரிடமும், வலியுறுத்தி உள்ளார். அதன்படி
பெற்றோரும், தாளநத்தம் ஊர்மக்களும், தீபமலையின் உடல் அடக்கம் செய்த இடம் அருகே கீதாவின் உடலை அடக்கம் செய்தனர்.
கீதா தற்கொலை குறித்து, கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

