ADDED : ஜன 21, 2025 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த அச்சல்வாடியை சேர்ந்தவர் சென்னகிருஷ்ணன்,48; தச்சு தொழிலாளி. இவரது மனைவி பூங்கா-வனம்,38. சென்னகிருஷ்ணன் தன் குடும்பத்தினருடன் அரூர் கோவிந்தசாமி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நி-லையில் நேற்று முன்தினம் மதியம், 1:30 மணிக்கு தண்ணீர் எடுத்து விட பூங்காவனம் மின்மோட்டார் சுவிட்ச் போட்டுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கியதில் பூங்காவனம் கீழே விழுந்-துள்ளார்.
அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு, 108 அவசரகால ஆம்புலன்சில் அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்-தனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர், பூங்காவனம் ஏற்க-னவே இறந்து விட்டதாக கூறினார். புகார்படி அரூர்
போலீசார் விசாரிக்கின்றனர். உயிரிழந்த பூங்காவனத்திற்கு, 2 மகன்கள் உள்ளனர்.

