ADDED : செப் 23, 2024 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஏ.பள்ளிப்பட்டி நடூரை சேர்ந்தவர் சிவக்குமார், 54. கூலித்தொழிலாளி. இவர் மனைவி மாதுமணி, 45. இவர்களுக்கு, மகன், மகள் உள்ளனர். மாதுமணி கடந்த, 8 ஆண்டுகளாக மனநிலை பாதித்திருந்தார்.
தினமும் வீடு வீடாக சென்று, உணவு வாங்கி சாப்பிட்டு விட்டு, இரவில் வீட்டிற்கு வந்து விடுவது வழக்கம். கடந்த, 2 நாட்களாக மாதுமணி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் காலை அதிகாரப்பட்டி சின்ன ஏரியிலுள்ள முட்புதரில், மாதுமணி சடலமாக கிடந்தார். ஏ.பள்ளிப்பட்டி போலீசார் சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.