ADDED : ஏப் 02, 2026 03:32 AM
அ நிறம் | அளவு
காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே, பூ வியாபாரம் செய்ய சென்ற பெண்-ணிடம், செயின் பறித்த அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து, கரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த லட்சுமி, 60. இவர், பூ வியாபாரம் செய்து வருகிறார்.
கடந்த, 30 அன்று அதிகாலை, 5:00 மணிக்கு லட்சுமி பூ வியாபாரம் செய்வதற்காக கிட்டம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் பைக்கில் வந்த அடை-யாளம் தெரியாத இருவர், லட்சுமி கழுத்தில் அணிந்திருந்த, இரண்டரை பவுன் தாலி செயினை பறித்து சென்றனர். புகார் படி, காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
