sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்

/

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்


ADDED : மார் 24, 2025 07:10 AM

Google News

ADDED : மார் 24, 2025 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் அடுத்த புட்டிரெட்டிப்பட்டி ஊராட்சியில் கெட்டூர், புட்டிரெட்டிப்பட்டி, இந்திரா நகர், உள்ளிட்ட, 7 குக்கிராமங்களில், 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். புட்டிரெட்டிப்பட்டி பழைய தெருவில், 150 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி சார்பில் முறையாக குடிநீர் விடுவதில்லை. இதனால் குடிநீரின்றி பொதுமக்கள் அலையும் அவல நிலையில் உள்ளனர்.

பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும், அதிகாரிகளிடமும் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. குடிநீர் இல்லாததால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். விரக்தி அடைந்த மக்கள், நேற்று மதியம் முறையான குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்து, புட்டிரெட்டிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே, காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us