ADDED : நவ 07, 2025 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி கடத்துார் அடுத்த தா.அய்யம்பட்டியை சேர்ந்தவர் சிவலிங்கம், 65. கூலித்தொழிலாளி
இவர் நேற்று முன்தினம் ரயில் ரோடு வேலைக்கு சென்றார். பணி முடிந்து இரவு, 8:30 மணியளவில் கடத்துார் - தாளநத்தம் ரோட்டில், புட்டிரெட்டிப்பட்டி கூட்ரோடு அருகே நடந்து வரும்போது, பின்னால் அதிவேகமாக வந்த பஜாஜ் டிஸ்கவர் பைக் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

