ADDED : மே 23, 2024 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த பச்சப்பனட்டி அருகே லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 45, கூலித்தொழிலாளி; இவர் நேற்றிரவு, 7:30 மணிக்கு, தன் ஓட்டு வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்தார்.
அப்போது, இடி, மின்னலுடன் மழை பெய்தது.திடீரென மின்னல் தாக்கியதில் ராஜேந்திரன் மயங்கி விழுந்தார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

