தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/சுவர் இடிந்து தொழிலாளி பலி

சுவர் இடிந்து தொழிலாளி பலி

சுவர் இடிந்து தொழிலாளி பலி


ADDED : செப் 06, 2026 04:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 06, 2026 04:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த மாவேரிப்பட்டியை சேர்ந்-தவர் பழனி, 65, கூலித்தொழிலாளி; இவரும், கோணம்பட்டியை சேர்ந்த கோவிந்தசாமி, கம்மாளம்பட்டி வேடியப்பன், முருகன், தேவராஜ் ஆகிய, 5 பேரும் நேற்று உடையானுாரை சேர்ந்த வேடி-யப்பன் என்பவரின் விவசாய கிணற்றை வெட்டும் பணியில் ஈடு-பட்டனர்.

மதியம், 12:15 மணிக்கு திடீரென கிணற்றின் சுவர் இடிந்து, பழனி தலை மீது விழுந்ததில் படுகாயமடைந்தார். அங்-கிருந்தவர்கள் அவரை மீட்டு, அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பழனியை பரிசோதித்த மருத்து-வர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர். அரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us