/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவர் கோவிலில் வழிபாடு
/
தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவர் கோவிலில் வழிபாடு
தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவர் கோவிலில் வழிபாடு
தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவர் கோவிலில் வழிபாடு
ADDED : செப் 26, 2024 01:38 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தட்சிணகாசி காலபை-ரவர் கோவிலில், நேற்று தேய்ப்பிறை அஷ்டமியையொட்டி, அதி-காலை முதல் சுவாமிக்கு, 108 வகை நறுமண பொருட்கள் மற்றும் பல்வேறு வகையான பழங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடந்-தன.
தொடர்ந்து, சுவாமிக்கு, 1,008 ஆகம பூஜை, வேத பாரா-யணம் மற்றும் சிறப்பு அர்ச்சனை நடந்தது. சிறப்பு அலங்கார சேவை, மஹா தீபாராதனையை தொடர்ந்து, ராஜ அலங்காரத்தில் காலபைரவர் அருள்பாலித்தார். சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக பக்தர்கள், சாம்பல் பூசணியில் விளக்கேற்றி வழிபட்டனர். தொடர்ந்து நேற்றிரவு, கோவில் வளாகத்தில், 108 கிலோ மிளகு, 1,008 கிலோ மிளகாய் கொண்டு, சத்ரு சம்ஹார யாகம் மற்றும் சுவாமி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.
* கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியிலுள்ள காலபைரவர் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. தங்கக்கவச அலங்காரத்தில் காலபைரவர் அருள்-பாலித்தார்.
பெண்கள் பூசணி மற்றும் தேங்காயில் விளக்கேற்றி நேர்த்திக்-கடன் செலுத்தினர். கிருஷ்ணகிரி அடுத்த கந்திகுப்பம் காலபை-ரவர் கோவில் மற்றும் சூரன் குட்டை தட்சிண காலபைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது.