/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மார்கழி அமாவாசையையொட்டி முத்தத்திராயன் கோவிலில் வழிபாடு
/
மார்கழி அமாவாசையையொட்டி முத்தத்திராயன் கோவிலில் வழிபாடு
மார்கழி அமாவாசையையொட்டி முத்தத்திராயன் கோவிலில் வழிபாடு
மார்கழி அமாவாசையையொட்டி முத்தத்திராயன் கோவிலில் வழிபாடு
ADDED : டிச 20, 2025 07:12 AM
ஏரியூர்: நெருப்பூர் அருகே மார்கழி அமாவாசையையொட்டி, முத்தத்தி-ராயன் கோவிலுக்கு மாலை அணிந்து, விரதமிருந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தர்மபுரி மாவட்டம், ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெருப்பூர் முத்தத்திராயன் கோவில் பிரசத்தி பெற்றது. சந்தன மர கடத்தல் வீரப்பன் வழிபட்டு வந்ததால், வீரப்பன் கோவில் எனவும் அழைக்கப்படுகிறது. இக்கோவில் தர்மபுரி-சேலம் மாவட்ட எல்-லையில் அமைந்துள்ளதால், இரு மாவட்ட மக்களும் வழிபடு-கின்றனர்.
மார்கழி மாத அமாவாசையான நேற்று நெருப்பூர், ஒட்டனுார், பன்னவாடியான் காடு, காமராஜ் பேட்டை, நாகமரை, ஏரியூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் மாலை அணிந்து, காவிரியாற்றில் இருந்து புனிதநீர் கொண்டு வந்து வழி-பட்டு, தங்களுடைய விரதத்தை முடித்தனர்.
கிரிவல பாதையில் சுவாமி நம்மை தாண்டி சென்றால், நம்மீ-துள்ள தீய சக்திகள் விலகும் என படுத்து வழிபட்டனர். ஆயிரக்-கணக்கானோர் வழிபாடு
செய்தனர்.

