ADDED : ஏப் 29, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்,:
அரூர், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று, 46 லட்சம் ரூபாய்க்கு மஞ்சள் ஏலம் நடந்தது.
தர்மபுரி மாவட்டம், அரூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் இருந்து, 96 விவசாயிகள், 630 மூட்டை மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், விரலி மஞ்சள் ஒரு குவிண்டால், அதிகபட்சமாக, 14,869 ரூபாய்க்கும், குறைந்தபட்ச குறைந்தபட்ச விலையாக, 12,661 ரூபாய்க்கும், விற்பனையானது. இதேபோல், கிழங்கு மஞ்சள், ஒரு குவிண்டால், அதிகபட்சமாக, 13,601 ரூபாய்க்கும், குறைந்தபட்ச விலையாக, 11,661 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம், 630 மூட்டை மஞ்சள், 46 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.