ADDED : ஜூலை 10, 2026 04:50 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி:கர்நாடகா
மாநிலம், பெங்களூருவை சேர்ந்த, 7 பேர், கேரளா மாநிலம், மூணாறு
பகுதிக்கு சுற்றுலா சென்று விட்டு, நேற்று முன்தினம் இரவு பெங்களூரு
திரும்பினர்.
அவர்கள் சென்ற கார், தர்மபுரி - பெங்களூரு புதிய தேசிய
நெடுஞ்சாலையில், இரவு, 10:30 மணிக்கு செல்லியம்பட்டி பகுதியில்
சாலையில் கவிழ்ந்தது. இதில், காரிலிருந்த, 7 பேரும் காயமடைந்தனர்.
அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம், தர்மபுரி
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு, சையத் ஷெரீப், 18, என்ற வாலிபர் உயிரிழந்தார். மதிகோன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
