/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
போலீஸ்காரரை மதுபாட்டிலால் தாக்கிய வாலிபருக்கு வலை
/
போலீஸ்காரரை மதுபாட்டிலால் தாக்கிய வாலிபருக்கு வலை
ADDED : ஜன 19, 2025 07:00 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அண்ணல்நகரை சேர்ந்தவர் தமிழ்மணி, 27. இவர், கோவை மாநகர காட்டூர் ஸ்டேஷனில், 2ம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். பொங்கல் பண்டி-கையையொட்டி விடுப்பில் ஊருக்கு வந்த தமிழ்மணி, அரூர் அடுத்த பாளையத்தில் உள்ள பாட்டி பழனியம்மாள் வீட்டிற்கு சென்றார்.
கடந்த, 16ல் இரவு, 9:45 மணிக்கு நண்பர் முகேசுடன், கருணாமூர்த்தி என்பவரது வீட்டின் அருகில் சென்றார். அப்-போது, எதிரே பாளையத்தை சேர்ந்த சந்தோஷ் மற்றும் பிரவின்-குமார், 27, ஆகியோர் கலைநிகழ்ச்சி பார்க்க தமிழ்மணியை அழைத்துள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்த தமிழ்மணியை  தகாத வார்த்தையால் திட்டிய பிரவின்குமார், மதுபாட்டிலை உடைத்து தாக்கியதில் காயமடைந்த தமிழ்மணி, அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகார் படி, அரூர் போலீசார் பிரவின்குமாரை தேடி வருகின்றனர்.

