/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குட்டையை கலக்குது அ.தி.மு.க., கலகலக்குது தி.மு.க.,
/
குட்டையை கலக்குது அ.தி.மு.க., கலகலக்குது தி.மு.க.,
குட்டையை கலக்குது அ.தி.மு.க., கலகலக்குது தி.மு.க.,
குட்டையை கலக்குது அ.தி.மு.க., கலகலக்குது தி.மு.க.,
ADDED : அக் 07, 2011 10:21 PM

திண்டுக்கல் நகராட்சி தலைவர் பதவி தி.மு.க, வேட்பாளராக, மாநில மகளிரணி தலைவி நூர்ஜகான் பேகம் போட்டியிடுகிறார்.
இவர், கட்சி தலைமையிடம் நெருங்கிய அளவுக்கு, தொண்டர்களிடம் நெருங்கவில்லை. கடந்த 1996, 2011 ல், எம்.எல்.ஏ., 'சீட்' கேட்டார். கிடைக்கவில்லை. 'நான் கட்சிக்கு பாடுபட்டு என்ன கண்டேன்? இதுக்காவது (நகராட்சி) 'சீட்' வேண்டும்,' என, 'ஒத்தக்காலில்' நின்று, வெற்றியும் பெற்றார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன், கடும் எதிர்ப்பு கிளம்பியது. 'ஆஹா! கிடைத்தது வாய்ப்பு,'என, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க, அ.தி.மு.க., தயாராகி விட்டது. அனைத்து வார்டுகளிலும், அதிருப்தியில் உள்ள தி.மு.க., நிர்வாகிகளை சரிக்கட்டி வருகின்றனர். 'கவுன்சிலர் தேர்தலில் உங்கள் இஷ்டம் போல செயல்படுங்க. நகராட்சி தலைவருக்கு, அ.தி.மு.க., வுக்கு ஆதரவு கொடுங்க,' என, கூறி வருகின்றனர்.
இதற்காக சில அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு, 'ஸ்பெஷல் அசைன்மென்ட்' கொடுக்கப்பட்டுள்ளது. தலையசைக்கும் தி.மு.க., வினருக்கு, 'செம கவனிப்பு' காத்திருக்கிறது. இது, அ.தி.மு.க., வை பொறுத்த வரை தேர்தல் வியூகம். இதையே எதிர்தரப்பிலோ, உள்குத்து, குழிபறிப்பு, என, விளிக்கலாம். அரசியலில் தான், ஒரே செயலுக்கு எத்தனை அர்த்தங்கள்.

