ADDED : மே 25, 2024 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : சமுத்திராபட்டி பகுதியில் மதுரை மண்டல புவியியல் சுரங்கத்துறை உதவி புவியிலாளர் பிரவீன்குமார் தலைமையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனை செய்ததில் அனுமதியின்றி 5 டன் கற்கள் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
லாரியை பிடித்த அதிகாரிகள் அதை நத்தம் போலீசில் ஒப்படைத்தனர்.
அதன்படி நத்தம் போலீசார் லாரி டிரைவர் வேணுகோபாலை கைது செய்தனர்.

