ADDED : செப் 18, 2024 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி அருகே புது தாராபுரம் ரோட்டில் அமைந்துள்ள ரயில்வே கேட்டில் இன்றும் நாளையும் (செப்.18,19 ) நடக்கும் பராமரிப்பு பணி காரணமாக இருநாட்கள் கேட் அடைக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
தொப்பம்பட்டி, தாராபுரம் , செல்லும் வாகனங்கள் ரயில்வே கேட்டை கடந்துசெல்லும் நிலையில் மாற்று பாதையில் செல்ல ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

