தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ திருடிய 2 பேர் கைது

திருடிய 2 பேர் கைது

திருடிய 2 பேர் கைது


ADDED : ஜூலை 29, 2024 06:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2024 06:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சாணார்பட்டி : சாணார்பட்டி கணவாய்பட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜன் 35. இவர் கோபால்பட்டியில் டூவீலர் ஒர்க் ஷாப் நடத்துகிறார். இவர் ஜூலை 25ல் பணிகளை முடித்துவிட்டு வழக்கம்போல் கடையை பூட்டி சென்றார். மீண்டும் காலையில் கடைக்கு வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு டூவலீர்களின் உதிரி பாகங்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது.

நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையில் எஸ்.ஐ., ராஜேந்திரன்,சிறப்பு எஸ்.ஐ., வெள்ளத்துரை, முருகன் போலீசார் தனிப்படை போலீசார் கோபால்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கோபால்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் 53,சந்திரபோஸ் 35, என்பதும் பாண்டியராஜன் கடையில் புகுந்து டூவீலர் உதிரிபாகரங்களை திருடியதும் தெரிந்தது. சாணார்பட்டி போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us