/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அச்சுறுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியால் விபத்து
/
அச்சுறுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியால் விபத்து
அச்சுறுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியால் விபத்து
அச்சுறுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியால் விபத்து
ADDED : பிப் 28, 2025 06:36 AM

கேபிள் ஒயர்களால் விபத்து : திண்டுக்கல் ராம்நகரில் கேபிள் ஒயர் ஆங்காங்கே தொங்குவதால் விபத்துக்கு வழிவகுக்கிறது. ரோட்டில் குறுக்கேயும் ஒயர்கள் தாழ்வாக செல்வதால் வாகனங்களில் செல்வோர் பாதிக்கின்றனர். ஒயர்களை ஒழுங்குபடுத்த வேண்டும்.
--பழனிச்சாமி, ராம்நகர்.
மின்கம்பத்தில் நுாலாம்படை : திண்டுக்கல் மெயின் ரோட்டில் உள்ள மின்கம்பத்தில் மேல் பகுதியில் முழுவதும் நுாலாம்படை பிடித்துள்ளது. இதனால் மின் விளக்கு வெளிச்சம் தெரியாமல் உள்ளது . கம்பத்தை சூழந்துள்ள நுாலாம்படையை அகற்ற வேண்டும்.
-முருகேஷ், திண்டுக்கல்.
சேதமான நீர் தேக்க தொட்டி : வடமதுரை வாலிசெட்டிபட்டியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி சேதமடைந்து விபத்து அபாயத்தில் உள்ளது. எப்போதும் விழும் நிலையில் நிலையில் உள்ளதால் இதன் அரகே செல்ல பலரும் அஞ்சுகின்றனர்.இதை சீரமைக்க வேண்டும்.
-ராஜா, வடமதுரை.
வயதானவர்கள் பாதிப்பு : வேம்பார்பட்டியில் இருந்து மொட்டையகவுண்டம்பட்டி செல்லும் ரோட்டில் ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகனங்கள் பழுதாவதுடன் சேதமான சாலையில் பயணிக்கும் வயதானவர்கள் பாதிக்கின்றனர்.
-பானு, மொட்டையகவுண்டம்பட்டி.
சாக்கடையில் குடிநீர் குழாய் : நிலக்கோட்டை தாலுகா அம்மையநாயக்கனுார் பேரூராட்சி பொம்மணம்பட்டியில் கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் குழாய் செல்கிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது .குழாயை மாற்றி அமைக்க வேண்டும்.
-க.ரதிஷ்பாண்டியன்,பொம்மணம்பட்டி.
----------தெருவில் குப்பை குவியல் : திண்டுக்கல் என்.எஸ் .நகர் அருகே விநாயகர் நகர் தெருவில் குப்பை குவிந்துள்ளது. பிளாஸ்டிக் கலந்த குப்பை என்பதால் பாதிப்பு ஏற்படுகிறது .துர்நாற்றமும் வீசுகிறது. குப்பையும் பல நாட்களாக அப்படியே உள்ளது.இதனை அகற்ற வேண்டும்.
-மாரிமுத்து, என்.எஸ்.நகர்.
ரோட்டில் ஓடும் கழிவு நீர் : ஒட்டன்சத்திரம் நகராட்சி செக்போஸ்டில் இருந்து நாகணம்பட்டி செல்லும் ரோட்டின் கிழக்குப் பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் கழிவு நீர் ரோட்டிலே செல்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இப்பகுதியில் சாக்கடை அமைக்க வேண்டும்.
-செந்தில், ஒட்டன்சத்திரம்.