ADDED : ஏப் 16, 2024 06:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் அருகே அய்யனார்புரம் சர்வசேவா மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
நத்தம் அய்யனார்புரம் அரசு உதவி பெறும் சர்வசேவா மேல்நிலைபள்ளியில் 2002ல் 12 ம் வகுப்பு பயின்ற மாணவர்கள் 22 ஆண்டுகளுக்குப் பின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. சர்வசேவா பள்ளிகளின் திட்ட இயக்குநர் வசந்தா தலைமை வகித்தார். தலைமையாசிரியர் மலர் விழி வரவேற்றார். குடும்ப உறுப்பினர்களுடன் வந்திருந்த முன்னாள் மாணவர்கள் பயின்ற காலத்தில் நடந்த நிகழ்வுகளை பகிர்ந்தனர். அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்கள் முன்னாள் மாணவர்களை பாட்டுடன் கூடிய நடன நிகழ்ச்சி நடத்தி வரவேற்றனர். ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் ரமேஷ், சத்தியசீலன், முஜீப், ஆதிலட்சுமிசெய்திருந்தனர்.

