ADDED : ஜூன் 27, 2026 10:31 PM
அ நிறம் | அளவு
சாணார்பட்டி, ஜூன் 28-
கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் நடந்த வருடாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இக்கோயிலில் வருடாபிேஷக விழாவையொட்டி யாகசாலை அமைத்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீரால் அம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.
கோயில் பீடாதிபதி சஞ்சீவி சுவாமிகள் யாகத்தை நடத்தினார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
