ADDED : ஆக 14, 2024 12:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : ஆட்டோ தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் ,அரசு வேலைவாய்ப்பில் ஆட்டோ ஓட்டுனர் குடும்பத்திற்கு முன்னுரிமை, ஆட்டோ ஓட்டுனர் மீது ஆன்லைன் வழக்குகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ,ஹிந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் வேடசந்துார் ஆத்துமேட்டில் நடந்தது.
மாவட்ட செயலாளர் செந்தில் வேல் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் சந்தானம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் மாரிமுத்து, மாவட்ட துணை தலைவர் கணேசன் பேசினார்.கோகுல் நன்றி கூறினார்.