ADDED : ஆக 15, 2024 05:36 AM

அ நிறம் | அளவு
பாலசமுத்திரம்: பழநி பாலசமுத்திரம் பேரூராட்சி பகுதியில் 96 ஏக்கரில் உள்ள கோயில்கள் ,வீடுகள் குடியிருப்புகள் வக்பு வாரிய சொத்துக்கள் எனக்கூறி இரண்டு ஆண்டுகளாக பத்திரப்பதிவு செய்ய இயலாமல் உள்ளது.
இதனை கண்டித்து பா.ஜ., மேற்கு மாவட்டம், கிழக்கு ஒன்றியம் சாரிபில் மாவட்ட பா.ஜ., தலைவர் கனகராஜ் தலைமையில் பாலசமுத்திரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் பிரகாஷ், ஒன்றிய பொது செயலாளர் சேகர், ஒன்றிய செயலாளர் பிரியங்கா சுபாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
