/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
/
மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 04, 2024 06:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : கோல்கட்டாவில் முதுநிலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் திண்டுக்கல் அரசு மருத்துவமனை வளாகம் இணை இயக்குநர் மருத்துவ பணிகள் அலுவலகம் அருகில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுகந்தி,டி.என்.என்.எம்.இ.ஏ.,மாநில செயலாளர் ஜெசி முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் குப்புசாமி நன்றி கூறினார்.