ADDED : ஆக 23, 2024 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எரியோடு: புதுரோட்டில் நாகையகோட்டை, கோவிலுார், வெல்லம்பட்டி ஊராட்சி பகுதியினருக்காக மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது.
தாசில்தார்கள் தமிழ்செல்வி, சரவணக்குமார் தலைமை வகித்தனர். ஊராட்சி தலைவர்கள் செந்தில்வடிவுஇளங்கோவன், செல்வமணி, கலைச்செல்வி முன்னிலை வகித்தனர். வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன் துவக்கி வைத்தார். ஒன்றிய தலைவர் சவுடீஸ்வரி, மாவட்ட கவுன்சிலர்கள் தமிழ்ச்செல்வி, தாமரைச்செல்வி, ஒன்றிய கவுன்சிலர் பார்த்தீபன், தி.மு.க., ஊராட்சி செயலாளர் செல்வம் பங்கேற்றனர்.

