sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

முறிந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தால் ஆபத்து

/

முறிந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தால் ஆபத்து

முறிந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தால் ஆபத்து

முறிந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தால் ஆபத்து


ADDED : ஜூன் 28, 2024 12:24 AM

Google News

ADDED : ஜூன் 28, 2024 12:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போக்குவரத்துக்கு சிரமம்

அய்யலுார் அப்பிநாயக்கன்பட்டியில் இருந்து கொல்லப்பட்டி புதுார் செல்லும் தார் ரோடு கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு சிரமம் தருகிறது .பல நாட்களாக குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் ,விவசாயிகள் சிரமப்படுகின்றனர். ராமசாமி, அய்யலுார்.

................-------

மழை நீருடன் சாக்கடை நீர்

சின்னாளப்பட்டி கீழக்கோட்டை 14வது வார்டு ஓடைத்தெருவில் சாக்கடை பாலம் கட்டியும் மழைநீர் ,சாக்கடை நீர்தேங்கி உள்ளது .மழைநேரத்தில் மழைநீருடன் சாக்கடை நீர் நடைபாதை முழுவதும் தேங்கி நிற்கிறது. இதை சரிசெய்ய வேண்டும். ஐயப்பன், சின்னாளப்பட்டி.

.............--------சேதமான மின்கம்பம்

ஒட்டன்சத்திரம் திருவள்ளுவர் ரோடு முத்து மஹால் பின்புற தெருவில் மின்கம்பம் சேதமடைந்து விரிசல் விட்டு முறிந்து விழும் நிலையில் உள்ளது. இனி மழைக்காலம் என்பதால் விபத்து ஏற்படும் முன் மின்கம்பத்தை மாற்ற வேண்டும். மோகன், ஒட்டன்சத்திரம்.

.................--------குடிநீர் தொட்டி சேதம்

வேடசந்துார் ஒன்றியம் நாகையகோட்டை என்.புதுரோடு ஏடி காலனியில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி குழாய் சேதமடைந்து தண்ணீர் வீணாகிறது .இதனால் பல வீடுகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது . திருப்பதி, நாகையகோட்டை.

................--------எந்நேரமும் விபத்து அபாயம்

ஒட்டன்சத்திரம் ஒன்றியம் தாசிரிபட்டி ஊராட்சி புதுக்கோட்டை அருந்ததியர் காலனியில் வீட்டின் கூரை இடிந்து காங்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் எந்நேரமும் விபத்து அபாயம் உள்ளது .இதை சரி செய்ய வேண்டும் கி.ரங்கசாமி, கம்பளிநாயக்கன்பட்டி.

..........--------கழிவு நீர் தேக்கத்தால் தொற்று

சிறுமலை அண்ணா நகர் 4வது வார்டில் சாக்கடையில் பல நாட்களாக கழிவுநீர் தேங்கி நிற்பதால் நோய்தாக்கும் அபாயம் உள்ளது . சிரியவர் முதல் பெரியவர் வரை பாதிக்கின்றனர். சாக்கடையை துார் வாரி கழிவுநீர் கடக்க செய்ய வேண்டும். ராமகிருஷ்ணன், சிறுமலை.

..........--------மேலாண்மையில் அலட்சியம்

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் குட்டத்துப்பட்டி ஊராட்சி மைலாப்பூரில் திடக்கழிவு மேலாண்மையில் அலட்சியம் நீடிக்கிறது. விளைநிலங்களில் பாலிதீன் கழிவுகளை கலப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சி.சேவியர், மைலாப்பூர்.

.......






      Dinamalar
      Follow us