துப்பாக்கி சுடுதலில் சாதித்த திண்டுக்கல் மாணவர்கள்
துப்பாக்கி சுடுதலில் சாதித்த திண்டுக்கல் மாணவர்கள்
ADDED : ஆக 06, 2026 09:42 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல், ஆக.7-
மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் திண்டுக்கல் மாணவர்கள் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடக்கிறது. இதில் திண்டுக்கல் மாவட்ட ஷூட்டிங் கிளப் சார்பில் 50 மீட்டர் பயர் ஆர்ம்ஸ் பிரிவில் மாணவர்கள் ஆதித்யா, நரேஷ்குப்தா, பிரகுல் ஆகியோர் மொத்தம் 7 தங்கம், 5 வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை பயிற்சியாளர்கள், பெற்றோர்கள், சக வீரர்கள் வாழ்த்தினர்.
