ADDED : ஆக 02, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: கோபால்பட்டியில் சாணார்பட்டி வட்டார களஞ்சியம், மகளிர் சுய உதவி குழுக்களின் கூட்டமைப்பு குழுமங்களின் 24ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது.
பல்வேறு வகை இன்சூரன்ஸ் திட்டங்களின் பயன்கள், வருங்கால தலைமுறையான வளரிளம் பெண்கள் ஆரோக்கியமாக இருக்க சிறுதானியங்கள், கீரைகள் உண்ணுதலின் நன்மைகள், புதிய செயற்குழு உறுப்பினர்கள், பணியாளர்கள் நியமனம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திண்டுக்கல் மண்டல களஞ்சிய இயக்க ஒருங்கிணைப்பாளர் தேவநேசன், சுகாதார ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம், ஒருங்கிணைப்பாளர்கள் கேசவராஜா, திவ்யா, யாசர் அராபத், நவீனா, அபிராமி, நைனார் முகமது அம்பலம், வட்டார களஞ்சிய சமுதாய கணக்காளர் சிவக்குமார், மண்டல பொறியாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
