ADDED : மார் 29, 2024 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : நீதிமன்றங்களில் இ.பைலிங்,ஆன்லைன் நடை முறைப்படுத்துவதை கண்டித்து திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டனர்.
தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். 500க்கு மேலான வழக்கறிஞர்கள் நீதிமன்றம் வராததால் நீதிமன்ற பணிகளில் தொய்வு ஏற்பட்டது. வழக்கறிஞர்கள் இல்லாமல் நீதிமன்றமும் வெறிச்சோடியது. ஏப்.1 லும் புறக்கணிப்பு போராட்டம் நடக்க உள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

