sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குறைகளை கூறுவோம் - தீர்வு காண்போம்

/

குறைகளை கூறுவோம் - தீர்வு காண்போம்

குறைகளை கூறுவோம் - தீர்வு காண்போம்

குறைகளை கூறுவோம் - தீர்வு காண்போம்


ADDED : மே 01, 2024 07:23 AM

Google News

ADDED : மே 01, 2024 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கழிவுநீர் தேக்கம்


ஒட்டன்சத்திரம் நல்லாகவுண்டர் நகர் பகுதியில் சாக்கடை வசதி இல்லாததால் தெருக்களில் கழிவுநீர் தேங்கியுள்ளது. கழிவு நீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- -சிவராஜ், ஒட்டன்சத்திரம்.

நடவடிக்கை எடுக்கப்படும்


ஒட்டன்சத்திரம் நல்லாக்கவுண்டர் நகரில் கழிவுநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.

- -ரமேஷ் , நகராட்சி 14வது வார்டு கவுன்சிலர்,ஒட்டன்சத்திரம்.

ஆக்கிரமிப்புகள்


வடமதுரையில் திண்டுக்கல் ரோடு காணப்பாடி ரோடு பகுதிகளில் தார் ரோட்டின் மீதே மண்ணை கொட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் போக்குவரத்ததிற்கு இடையூறாக உள்ளது.

- -கண்ணன், வடமதுரை.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்


ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்காக அளவீடு பணி முடிந்துள்ளது. அரசு அனுமதி கிடைத்ததும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

- -கந்தசாமி, சாலை ஆய்வாளர், வேடசந்துார்.

-------------- கழிவு நீர் வாய்க்கால்


கோம்பைப்பட்டி ஊராட்சி 1வது வார்டு பகுதியில் சிமென்ட் சாலை , சாக்கடை சேதமடைந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அவதி அடைகின்றனர்.

- -ரிச்வானா பானு, அய்யாபட்டி.

பணிகள் தொடங்கும்


கோம்பைப்பட்டி 1வது வார்டில் பேவர் பிளாக் சாலை, சாக்கடை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் பணிகள் தொடங்கும்.

--ராசு, துணைத் தலைவர், கோம்பைபட்டி.

---------------------- துண்டிக்கப்பட்ட ரோடு


வேடசந்துார் நேருஜி நகர் பூங்கா ரோட்டை துண்டித்ததில் பள்ளம் உள்ளது. இதனால் டூவீலர் ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ரோட்டை சரி செய்ய வேண்டும்

- -கணேசன், வேடசந்துார்

விரைவில் சரி செய்யப்படும்


கவனத்திற்கு வந்துள்ளது, விரைவில் சரி செய்து சிரமம் தவிர்க்கப்படும்

- -மேகலா, பேரூராட்சி தலைவர், வேடசந்துார்.






      Dinamalar
      Follow us